காதலின் பொன் வீதியில்......
படம்: பூக்காரி
நடிப்பு: மு க முத்து
பெ:காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்கண்ணோடு ஒருத்தி வந்தாள் இந்தக்கண்ணோடு ஒருத்தி வந்தாள்
ஆ:காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்பண்ணோடு ஒருத்தி வந்தாள்இந்தப் பண்ணோடு ஒருத்தி வந்தாள் (காதலின்)
பெ:திருப்பாற்கடலின் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக் அங்கு
பகலுமில்லை ஒரு இரவுமில்லை
நாம் வாழ்ந்த்ருப்போம் இனிதாக்
ஆ:இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம் போலே
என் மனதிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
( காதலின்)
ஆ:
விழியோரங்களில் சில் நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
பெ:
அந்தக் கவிதையிலே உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையாகும்
ஆ:
அந்தக் கலைகளிலும் பல புதுமையுண்டு
அதை ரசிப்பதுதான் பேரின்பம்
பெ:
இனப வாசலிலே ஒரு காவலில்லை
இனிகாலமெல்லாம் நம் சொந்தம்
காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
இந்தப் பண்ணோடு ஒருத்தி வந்தாள் (காதலின்)

2 Comments:
மிகவும் இனிமையான பாடல்.
பலமுறை ரசித்துக் கேட்டிருக்கிறேன்.
11:58 PM
காதலின் பொன் வீதியில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
சு.ராஜகோபால்
அல்கோர்
கத்தார்
1:41 PM
Post a Comment
<< Home